சுவையான மிளகு காரச் சட்னி

0
தேவையான பொருட்கள்
  • தக்காளி - 5 (பெரியது)
  • காய்ந்த மிளகாய் - 4
  • மிளகு - 1 தேக்கரண்டி
  • வெந்தயம் - 3/4 தேக்கரண்டி
  • பெருங்காயம் - சிறிதளவு
  • நல்லெண்ணெய் - 2 குழிக்கரண்டி
  • கடுகு, உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - 2 ஆர்க்கு
  • உப்பு - தேவைக்கேற்ப


செய்முறை  :
தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்து கொள்ளவும். 
  • தக்காளியை பொடியாக வெட்டிக் கொள்ளவும்.  
  • வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி மிளகாயை சிவக்க வறுத்து எடுக்கவும்.
  • அடுத்து மிளகை போட்டு வெடித்ததும் உடனே எடுத்துக் விடவும். 
  • அடுப்பை அணைத்து வைத்து வாணலி சூட்டில் வெந்தயத்தை போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும்.
  • மீண்டும் அடுப்பை எரியவிட்டு, வாணலியில் மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி, பெருங்காயம் தூவி, தக்காளியை போட்டு உப்பு சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி நன்றாக குழைய வதங்க வேண்டும். வதங்கிய பின்னர் எடுத்து, வறுத்த எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
  • தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து வெடித்ததும், கறிவேப்பிலை போட்டு தாளித்து, அரைத்த சட்னியில் கொட்டி கலந்து விடவும்.
சுவையான மிளகு கார சட்னி தயார். இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)